திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் 19 மது போத்தல்களை கொண்டு சென்ற நபர் ஒருவரை இன்று (13) கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பேராறு, கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய ஒருவரே கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபர் முச்சக்கர வண்டியொன்றில் 19 போத்தல் சாராயத்தினை கொண்டு சென்ற போதே போதைப் பொருள் குற்றத் தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேக நபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபர் கந்தளாய் நகரிலிருந்து பேராறு பகுதிக்கு முச்சக்கர வண்டியில் அனுமதிப்பத்திரமின்றி கொண்டு சென்ற போது 19 போத்தல் சாராயத்துடன் சந்தேக நபரை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபர் பயன்படுத்திய முச்சக்கர வண்டி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
13,14ஆம் திகதிகளில் மதுபான சாலைகளை திறக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
திருகோணமலை நிருபர் பாருக்
No comments:
Post a Comment