முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகயாமடைந்த ராணுவ வீரர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கெப்பற்றிக்கொலாவ பகுதியினை சேர்ந்த 37 வயதுடைய ராணுவ வீரர் ஒருவர் விடுமுறையில் வீடு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த வேளை முள்ளிவாய்க்கால் பகுதியில் கப் வாகனம் மோதித்தள்ளி விபத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இதன்போது காயமடைந்த படை வீரர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோது அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தினை ஏற்படுத்திய கப் சாரதி வாகனத்தினை விட்டு தப்பி ஓடியுள்ளார்.
விபத்து குறித்து முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் வாகனம் முல்லைத்தீவு பொலிஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் வாகனத்தின் உரிமையாளரை கண்டறிந்து சாரதியினை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.
முல்லைத்தீவு நிருபர் தவசீலன்
No comments:
Post a Comment