இரண்டு கனரக வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து! மூவர் வைத்தியசாலையில் அனுமதி - News View

About Us

About Us

Breaking

Saturday, March 27, 2021

இரண்டு கனரக வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து! மூவர் வைத்தியசாலையில் அனுமதி

திருகோணமலை, ஹபரணை பிரதான வீதியில் கொள்கலன் ஒன்றும் லொறியொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் அவ்வாகனங்களில் சென்ற மூவர் படுகாயமடைந்துள்ளதாக ஹதரஸ்கொட்டுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இரண்டு வாகனங்களும் விபத்துக்குள்ளாகி பாலமொன்றினுள் விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்விபத்துச் சம்பவம் இன்று (27) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதில் பயணம் செய்த லொறியின் சாரதியொருவரும், கொள்கலனில் பயணித்த சாரதியும் அதன் உதவியாளரும் படுகாயமடைந்த நிலையில் ஹபரணை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

திருகோணமலையிலிருந்து ரத்மலானை பகுதிக்கு பொருட்களை ஏற்றிச் சென்ற கொள்கலனும், குருணாகலையிலிருந்து திருகோணமலைக்குச் சென்ற லொறியுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

திருகோணமலை நிருபர் பாருக்

No comments:

Post a Comment