பட்டதாரிகள் ஆங்கில ஆசிரியர்களாக வட மாகாணத்தில் இணைக்கப்பட்டுள்ளது முதன் முறையாகும் - ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 23, 2021

பட்டதாரிகள் ஆங்கில ஆசிரியர்களாக வட மாகாணத்தில் இணைக்கப்பட்டுள்ளது முதன் முறையாகும் - ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ்

டிப்ளோமா பட்டதாரிகள் ஆங்கில ஆசிரியர்களாக வட மாகாணத்தில் இணைக்கப்பட்டுள்ளது முதன் முறையாகும் என வட மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்தார்.

வட மாகாணத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கான ஆங்கில ஆசிரியர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வும், வட மாகாண விவசாய அமைச்சுக்கு கீழான விவசாய போதனாசிரியர், விவசாய தொழில் நுட்பவியலாளர்களுக்கான நியமன கடிதங்கள் வழங்கும் நிகழ்வும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி ‘தந்தை செல்வா’ மண்டபத்தில் நேற்று 9 மணிக்கு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டுஉரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் பேசிய அவர், ஆங்கில, கணித, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப ஆசிரியர்களுடைய ஆளணி பற்றாக்குறை, வட மாகாண கல்வி தரத்திலும் கல்வி நிலையிலும் பாரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக கூறிய அவர், அதனை நிவர்த்தி செய்யும் முதல்படியாக இந்த ஆங்கில ஆசிரியர் நியமனம் அமையும் என நம்பிக்கை வெளியிட்டார்.

மேலும், இனிவரும் காலங்களில் அத்தனை கிராமப்புற பாடசாலைகளிலும் ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப ஆசிரியர்கள் தேவைக்கு ஏற்ப தகுதிகளின் அடிப்படையில் நியமிக்கபடவுள்ளதால் கல்வி சார் செயற்பாடுகள் சரியாக புகட்டப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார். 

அத்துடன், மாணவர்கள் பல்கலைகழகங்கள் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளில் அந்தந்த துறைகளில் பயிற்றுவிக்கப்பட வேண்டும் எனவும் சர்வதேச தரத்திலான கல்வியை மாணவர்கள் பெற்றுகொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

இலங்கையில் பாரம்பரிய முறையிலான உற்பத்தி முறைகளே தற்போதும் காணப்பட்டு வருவதால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் உற்பத்தி விலை அதிகமாக காணப்படுகிறது, அதுவே பொருட்கள் இறக்குமதி செய்யக் காரணமாகிறது எனவும் சுட்டிக்காட்டினர்.

மேலும், இந்த நிலையை மாற்றி நவீன தொழில்நுட்ப முறைகளை விவசாயிகள் மற்றும் கால்நடை உற்பத்தியாளர்களுக்கு பயிற்றுவித்து நவீன தொழில்நுட்ப முறைகளின் மூலம் உற்பத்தி செலவை குறைத்து உற்பத்தி துறையிலே ஒரு புதிய புரட்சியை கொண்டுவர வேண்டும் எனும் நோக்கத்துடன் தான் விவசாய போதனாசிரியர், விவசாய தொழில் நுட்பவியலாளர்களுக்கான நியமனங்கள் வழங்கபடுவதாகவும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment