விபத்துக்களால் நேற்றைய தினம் மாத்திரம் 12 பேர் உயிரிழப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, March 1, 2021

விபத்துக்களால் நேற்றைய தினம் மாத்திரம் 12 பேர் உயிரிழப்பு

(எம்.மனோசித்ரா)

வீதி விபத்துக்களில் நேற்றைய தினத்தில் (28) மாத்திரம் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதில் 8 பேர் நேற்று இடம்பெற்ற வாகன விபத்துக்களில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், ஏனைய 4 பேரும் இதற்கு முன்னர் இடம்பெற்ற விபத்துக்களில் காயமடைந்து சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், உயிரிழந்தவர்களில் முச்சக்கர வண்டி சாரதிகள் நால்வரும், பாதசாரிகள் நால்வரும், சைக்கிளில் சென்ற இருவரும், மேலுமிருவரும் உள்ளடங்குகின்றனர். 

நாளொன்று விபத்துக்களால் 10 - 12 பேர் உயிரிழக்கின்றமை கவலைக்குரியது. வாகன சாரதிகளிலும், பாதசாரிகளினதும் கவனக்குறைவால் இவ்வாறான விபத்துக்கள் இடம்பெறுகின்றன.

எனவே சாரதிகளும், பாதசாரிகளும் மிகக் கவனமாக செயற்படுமாறு கேட்டுக் கொள்கின்றோம். அவ்வாறில்லையெனில் விபத்துக்கள் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதனால் காயமடைந்து வாழ்நாள் முழுவதும் அங்கவீனமடையக் கூடிய நிலைமையும் ஏற்படும். 

எனவே தொலைபேசியில் பேசிக் கொண்டு வாகனத்தை செலுத்தல் உள்ளிட்டவற்றை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.

No comments:

Post a Comment