பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி மன்னாரிற்குள் நுழைய தடை விதித்தது நீதிமன்றம் - News View

About Us

Add+Banner

Breaking

Wednesday, February 3, 2021

demo-image

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி மன்னாரிற்குள் நுழைய தடை விதித்தது நீதிமன்றம்

Mannar-Court
கிழக்கு மாகாணத்தின் பொத்துவில் பகுதியில் இருந்து பொலிகண்டி வரையில் தமிழர்களின் நடை பவணி இடம்பெற்று வருகின்ற நிலையில் குறித்த பேரணி மன்னார் மாவட்டத்திற்குள் நுழைய மன்னார் நீதவான் எம்.கணேசராஜா இன்றையதினம் (3) தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மன்னார் பொலிஸார் மன்னார் நீதிமன்ற நியாதிக்க எல்லைக்கு உற்பட்ட பகுதிக்குள் குறித்த பவனியானது உள் நுழைவதையும், எதிர்வருகின்ற சுதந்திர தினத்தையும் அல்லது இன ஒன்றுமையை குழப்புகின்ற வகையிலும் இன முரண்பாட்டை தோற்றுவிக்கின்ற வகையிலும் ஒழுங்கமைக்கப்படுகின்ற ஆர்ப்பாட்டங்கள் அதற்கான ஏற்பாடுகள் மன்னார் மாவட்டத்திற்குள்ள செய்யக்கூடது என்ற தடையுத்தரவினை கோரி 14 நபர்களுக்கு எதிராக தாக்கல் செய்து கட்டளையினை பெற்றுள்ளனர்.

இத்தடை உத்தரவானது இன்று 3 ஆம் திகதி முதல் 6 ஆம் திகதி வரை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த கட்டளையானது இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, யாழ் மாநகர சபை மேயர் மணிவன்னன், யாழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 14 நபர்களுக்கு எதிராக இவ்வாறு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவ் வழக்கானது இன்றையதினம் புதன்கிழமை (3) மன்னார் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்டு சமர்பணம் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இந்த சமர்ப்பணமானது பொது தொல்லையாக எற்படுவதாகவும் கொவிட்-19 தொற்று காரணமாக தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டு கட்டளை கோரியிருந்தனர்.

இதன்போது மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் குறித்த கட்டளைக்கு எதிராக வெறுமனே ஊகத்தின் அடிப்படையில் இந்த வழங்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், தனிமைப்படுத்தல் விதிகளை கடந்து போராட்டங்கள் மேற்கொள்வது ஜனநாயக உரிமை எனவும் இது அரசியல் அமைப்பில் அங்கிகரிக்கப்பட்ட உரிமை எனவும் சட்டத்தரணிகளினால் மன்றில் அட்சேபனை தெரிவிக்கப்பட்டது.

எனினும் பொலிஸாரால் கோரப்பட்ட கட்டளை மன்னார் நீதவான் நீதி மன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *