வீடொன்றில் இருந்து ஆங்கிலப் பாட ஆசிரியர் ஒருவரின் சடலம் மீட்பு - பெரியகல்லாறில் சம்பவம் - News View

About Us

About Us

Breaking

Sunday, February 7, 2021

வீடொன்றில் இருந்து ஆங்கிலப் பாட ஆசிரியர் ஒருவரின் சடலம் மீட்பு - பெரியகல்லாறில் சம்பவம்

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து ஆசிரியர் ஒருவரின் சடலம் நேற்று (6) மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர்.

பெரியகல்லாறு 02, கனடியன் வீதியைச் சேர்ந்த 30 வயதையுடைய களுவாஞ்சிகுடியில் உள்ள பிரபல பாடசாலையென்றில் ஆரம்பப் பிரிவில் கடமையாற்றி வந்த ஆங்கில பாட ஆசிரியரொருவரே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குடும்ப பிரச்சினை தொடர்பில் கடிதம் ஒன்றினை எழுதி வைத்துவிட்டு இவர் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவானின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற களுவாஞ்சிகுடி பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி சிதம்பரப்பிள்ளை ஜீவரெத்தினம் பிரேதத்தை பார்வையிட்ட பின்னர் பிரேதத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று பிரேத பரிசோதனைக்குட்படுத்தும் படி பொலிஸாரிடம் உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை களுவாஞ்சிகுடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(வெல்லாவெளி நிருபர் - க. விஜயரெத்தினம்)

No comments:

Post a Comment