பலாங்கொடை பிரதேச பாடசாலை மாணவி ஒருவர் நீரில் மூழ்கி மரணமான சம்பவத்தின் அடிப்படையில், ஆசிரியை ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பலாங்கொடை, கல்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, இரத்தினபுரி தென்ன வித்தியாலய ஆசிரியை மற்றும் 14 சக மாணவர்கள், வளவை ஆற்றில் நீராடச் சென்ற போது, 16 வயதான மாணவியே இவ்வாறு பரிதாப மரணத்தை தழுவியுள்ளார்.
வெளிக்கள விடயத்திற்கு பொறுப்பான ஆசிரியை ஒருவரும் 7 சக மாணவிகள் உள்ளிட்ட 15 மாணவ, மாணவியர்களும் இவ்வாறு நீராடச் சென்றுள்ள வேளையில் இம்மரணம் சம்பவித்துள்ளது.
உரிய பாடசாலை அதிபரிடமோ, வலய கல்விப் பணிப்பாளரிடமோ உரிய அனுமதி பெறாமல் குறித்த வெளிக்கள விஜயத்தை மேற்கொண்டுள்ளதன் மூலம் அலட்சியமாக நடந்து கொண்டுள்ளமை தொடர்பில் குறித்த ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மீட்கப்பட்டுள்ள சிறுமியின் சடலத்தின் பிரேதப் பரிசோதனை நடத்தப்படவுள்ளதாகவும் விசாரணைகளை நடத்திவரும் கல்தோட்டைப் பொலிசார் நேற்று தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட ஆசிரியை இன்றையதினம் (01) பலாங்கொடை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
(இரத்தினபுரி நிருபர் - ஏ.ஏ.எம். பாயிஸ்)
No comments:
Post a Comment