கிளிநொச்சியில் 3 பிள்ளைகளின் தாய் படுகொலை : கணவர் கைது - News View

About Us

About Us

Breaking

Sunday, January 17, 2021

கிளிநொச்சியில் 3 பிள்ளைகளின் தாய் படுகொலை : கணவர் கைது

கிளிநொச்சி பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட தெளிகரை பகுதியில் குடும்ப பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

தெளிகரையில் அமைந்துள்ள அவரது வீட்டில் வைத்து குறித்த பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். வயிற்று பகுதியில் வெட்டு காயங்களுடன் குறித்த பெண்ணின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் 37 வயதுடைய ரூபஸ் கிருஸ்ணகுமாரி என்ற 3 பிள்ளைகளின் தாய் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். பெண்ணின் வயிற்று பகுதியில் வெட்டு காயங்கள் காணப்படுவதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை சம்பவ இடத்திலிருந்து கூரிய ஆயுதமும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான பூர்வாங்க விசாரணைகளை பூநகரி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர். உயிரிழந்த பெண்ணின் சடலம் நீதவான் பார்வையிட்டதன் பின்னர் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படும் எனவும் பொலிசார் மேலும் தெரிவிக்கின்றனர்.

கிளிநொச்சி நிருபர் நிபோஜன்

No comments:

Post a Comment