வரவு செலவுத் திட்டத்தில் அநாவசிய அபிவிருத்தி திட்டங்களுக்காக அரசாங்கம் கோடிக்கணக்கான நிதியை ஒதுக்கியுள்ளது - ஹர்ஷண ராஜகருணா - News View

About Us

About Us

Breaking

Monday, December 14, 2020

வரவு செலவுத் திட்டத்தில் அநாவசிய அபிவிருத்தி திட்டங்களுக்காக அரசாங்கம் கோடிக்கணக்கான நிதியை ஒதுக்கியுள்ளது - ஹர்ஷண ராஜகருணா

(எம்.மனோசித்ரா) 

கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கும், தொழிலை இழந்துள்ளவர்களுக்கும் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் எந்தவொரு நிவாரணத்தையும் வழங்காமல் அநாவசிய அபிவிருத்தி திட்டங்களுக்காக அரசாங்கம் கோடிக்கணக்கான நிதியை ஒதுக்கியுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், நாளொன்றுக்கு 500 - 600 தொற்றாளர்கள் இனங்காணப்படும் நிலைமையானது நாட்டில் வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்படவில்லை என்பதை தெளிவுபடுத்துகிறது. 

மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதன் மூலம் நாடு எந்தளவிற்கு அபாய நிலையை அடைந்துள்ளது என்பது சுகாதாரத் துறையினராலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் கூட கொவிட் தடுப்பிற்கான தடுப்பூசியை பெற்றுக் கொள்ள இலங்கை அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கையையும் முன்னெடுக்கவில்லை. 

மாறாக அமைச்சர்கள் அனைவரும் ஆயுர்வேத பானங்களை அருந்திக் கொண்டிருக்கின்றனர். ஆனால் கொவிட் கட்டுப்படுத்தலுக்காக செயற்பாட்டு ரீதியில் எந்தவொரு வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படவில்லை.

கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்காகவும் தொழிலை இழந்துள்ளவர்களுக்காகவும் வரவு செலவு திட்டத்தில் எந்தவொரு நிவாரணமும் வழங்கப்படவில்லை. ஆனால் அநாவசிய அபிவிருத்தி திட்டங்களுக்கு கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கியுள்ளனர். 

2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் தாமரை கோபுரம் மற்றும் தாமரை தடாகம் என்பவற்றை அமைத்தததைப் போன்று தற்போதும் அநாவசிய அபிவிருத்தி திட்டங்களே இந்த அரசாங்கத்திடம் உள்ளது. இவ்வாறான வேலைத் திட்டங்களுக்காக சுமார் 6000 ஏக்கர் வனப்பகுதி இந்த அரசாங்கத்தால் சீரழிக்கப்பட்டுள்ளது என்றார்.

No comments:

Post a Comment