2021 ஆம் ஆண்டுக்கான சிவனொளிபாதமலை யாத்திரைக்கான பருவகாலம் பூரணை தினமான இன்று (29.12.2020) ஆரம்பமாகியது.
சிவனொளிபாதமலை கடல் மட்டத்திலிருந்து (7,359 அடி) உயரமான கூம்பு வடிவிலான மலையாகும். இம்மலையானது சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களுக்கிடையிலான எல்லையில் அமைந்துள்ளது.
இரத்தினபுரி பெல்மதுளை கல்பொத்த ரஜமஹா விகாரையிலிருந்து புனித விக்கிரகங்கள் நல்லதண்ணி பாதை வழியாக நேற்று (28.12.2020) நள்ளிரவு மலையுச்சிக்கு எடுத்து செல்லப்பட்டதாக சிவனொளிபாதமலை நாயக்க தேரர் பெங்கமுவே தம்மதின்ன தெரிவித்தார். இந்த முறை 4 வீதிகளின் ஊடாக ஊர்வலம் பயணித்தது.
அந்த வகையில், பலாங்கொடை - பொகவந்தலாவ வீதியில் ஊர்வலம் பயணித்து, அவிசாவளை, அட்டன் - நல்லதண்ணி ஊடாக சிவனொளிபாதமலைக்கு ஒரு ஊர்வலம் சென்றது.
மற்றைய ஊர்வலம் குருவிட்ட - இரத்தினபுரி வீதி ஊடாக பயணித்தது. மற்றது, பெல்மதுளை இரத்தினபுரி - ரஜமாவத்தை வழியாக சென்றது.
மேற்படி ஊர்வலம் செல்லும் வீதிகளின் இடைக்கிடையில் அன்னதானம் மற்றும் பானங்கள் வழங்குவதற்கு இம்முறை முற்றாக தடை விதிக்கப்பட்டது. அதற்கு பதிலாக விரும்பியோர் முகக் கவசங்கள் மற்றும் தொற்று நீக்கி திரவங்கள் என்பன பக்த அடியார்களுக்கு வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
சிவனொளிபாதமலைக்கு தரிசிக்க செல்லும் அடியார்களின் எண்ணிக்கை 200 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு வீதியில் 50 பேர் மட்டுமே செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சிவனொளிபாதமலையில் அனுமதி பெற்று அமைக்கப்பட்டுள்ள கடை தொகுதிகள் அனைத்தும் சுகாதார விதிமுறைக்கமைய நடைமுறை படுத்தப்பட்டுள்ளது.
ஆரம்பம் முதல் மார்ச் மாதம் 04ஆம் திகதி வரை தேசிய மற்றும் சர்வதேச வைத்திய குழுக்கள், சுகாதார பரிசோதகர்கள், தொற்று நீக்கி குழுக்களை சேவையில் அமர்த்துவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளது.
எவ்வாறாயினும் யாத்திரையில் பங்கேற்கும் அடியார்கள் தத்தமது பிரதேச செயலகங்களில் பதிவு செய்வதுடன் தனிமைப்படுத்தப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவில்லை என்பதைனை பொது சுகாதார பரிசோதகர்களினால் உறுதிப்படுத்தப்பட்ட அனுமதி பத்திரமொன்றை தம்வசம் வைத்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment