பயன்பாடற்ற கார்பன் பேனாக் குழாய்கள் மற்றும் பற்தூரிகைகள் மீள் சுழற்சிக் கொள்கலனை மதிப்பீடு செய்தார் பிரதமர் - News View

About Us

About Us

Breaking

Friday, December 4, 2020

பயன்பாடற்ற கார்பன் பேனாக் குழாய்கள் மற்றும் பற்தூரிகைகள் மீள் சுழற்சிக் கொள்கலனை மதிப்பீடு செய்தார் பிரதமர்

பயன்பாடற்ற கார்பன் பேனாக் குழாய்கள் மற்றும் பற்தூரிகைகளை பாதுகாப்பாக மீள் சுழற்சி செய்வதற்காக சுற்றாடல் துறை அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட மீள் சுழற்சிக் கொள்கலனை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று (2020.12.03) இடம்பெற்றது.

சுற்றூடல்த்துறை அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் பாராளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில் வைத்து மீள் சுழற்சி கொள்கலன் பிரதமரிடம் வழங்கப்பட்டது.

‘இது சட்டம் அல்ல ஒழுக்கம்’ என்ற எண்ணக்கருவுக்கமைய செயற்படுத்தப்படும் இந்த சுற்றாடல் பாதுகாப்பு சார்ந்த திட்டத்தை நாடு முழுவதுமுள்ள பாடசாலைகள் மற்றும் நிறுவன மட்டத்தில் செயற்படுத்துவது காலத்தின் தேவையாகும் என பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

நாட்டின் பாடசாலை அமைப்பின் ஊடாக மாத்திரம் நாளொன்றுக்கு ஒதுக்கப்படும் கார்பன் பேனாக் குழாய்களின் எண்ணிக்கை சுமார் 80 கிலோ கிராம் ஆகும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

சுற்றாடல்துறை அமைச்சர் மஹிந்த அமரவீரவின் எண்ணக்கருவிற்கு அமைய, இதுவரை கவனம் செலுத்தப்படாத இந்த சுற்றாடல் பிரச்சினைக்கு தீர்வாக ஆரம்பிக்கப்பட்ட பாதுகாப்பான மீள் சுழற்சி அமைப்பொன்றை அறிமுகப்படுத்துவதற்கு, சுற்றாடல்த்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளமை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மதிப்பீட்டிற்கு உட்படுத்தப்பட்டது.

பாவனையின் பின்னர் ஒதுக்கப்படும் 3000 கார்பன் பேனாக் குழாய்கள் மற்றும் 500 பற்தூரிகைகளை இத்தகைய ஒரு கொள்கலனில் இட முடியும்.

இந்தக் கொள்கலன் அனைத்து பாடசாலைகளுக்கும் இலவசமாக வழங்கப்படுவதுடன், INSEE மற்றும் அட்லஸ் நிறுவனங்களால் அவை கொள்வனவு செய்யப்படவுள்ளன.

No comments:

Post a Comment