உள்ளூர் துப்பாக்கிகளை வைத்திருந்த இருவருக்கு விளக்கமறியல் - News View

About Us

About Us

Breaking

Friday, November 13, 2020

உள்ளூர் துப்பாக்கிகளை வைத்திருந்த இருவருக்கு விளக்கமறியல்

திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட மூன்று துப்பாக்கிகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இருவரை இம்மாதம் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, மூதூர் நீதிமன்ற நீதவான் எம்.எஸ்.எம். சம்சுதீன் உத்தரவிட்டுள்ளார்.

இச்சந்தேகநபர்களை, மூதூர் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் நேற்று (12) ஆஜர்படுத்தியபோதே இவ்விளக்கமறியல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

மூதூர் சாபி நகர் பகுதியைச் சேர்ந்த 59, 19 வயதுடைய தந்தையும், மகனுமே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் வீட்டில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள் வைத்திருப்பதாக மூதூர் விசேட புலனாய்வு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொண்டபோது, குறித்த துப்பாக்கிகளுடன் சந்தேகநபர்களை கைது செய்ததாக, பொலிஸார் தெரிவித்தனர்.

(கந்தளாய் தினகரன் நிருபர் - எப். முபாரக்)

No comments:

Post a Comment