மாவையை செயலாளராக அங்கீகரித்தமை கூட்டமைப்பை பதிவு செய்வதற்கான முதற்படி என்கிறார் செல்வம் எம்.பி - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 4, 2020

மாவையை செயலாளராக அங்கீகரித்தமை கூட்டமைப்பை பதிவு செய்வதற்கான முதற்படி என்கிறார் செல்வம் எம்.பி

(ஆர்.ராம்)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளராக இலங்கை தமிழரசுக் கட்சியின் செயலாளர் மாவை.சோ.சேனாதிராஜாவை நியமிப்பதற்கு ரெலோ அங்கீகரித்தமையானது கூட்டமைப்பை பதிவு செய்வதற்கான முதற்படி என்று அதன் தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக செயற்பட்டு வருகின்ற நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் கூட்டமைப்பின் தலைவர் மற்றும் செயலாளர் பற்றிய விபரங்கள் அண்மையில் கோரப்பட்டிருந்தன. 

ஆகவே அதுபற்றிய கவனத்தினை பங்காளிக் கட்சியகள் என்ற அடிப்படையில் தமிழரசுக் கட்சி மற்றும் புளொட் ஆகிய தரப்புக்களுடன் ரெலோ ஆராய்ந்திருந்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்டமைக்கப்பட்ட ஒரு சட்ட அங்கீகாரம் பெற்ற அரசியல் தரப்பாக உருவாக வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்ச்சியாக இருந்து வருகின்றன.

அதனடிப்படையிலேயே தற்போது கூட்டமைப்பின் செயலாளராக மாவை.சோ.சேனாதிராஜாவை நியமிப்பதற்கான அங்கீகாரத்தினை ரெலோ வழங்கியுள்ளது.

முதற்கட்டமாக தேர்தல்கள் ஆணையக்குழுவிற்கு செயலாளரின் பெயர் அறிவிக்கப்படவுள்ளதோடு அதற்கு அடுத்தகட்டமாக சட்ட அங்கீகாரம் பெற்ற கட்டமைப்பாக கூட்டமைப்பினை மாற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு நாம் எதிர்பார்த்திருக்கின்றோம் என்றார்.

No comments:

Post a Comment