பொகவந்தலாவையில் தாய், தந்தை மற்றும் மகளுக்கு கொரோனா! - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 4, 2020

பொகவந்தலாவையில் தாய், தந்தை மற்றும் மகளுக்கு கொரோனா!

பொகவந்தலாவை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு கீழுள்ள கொடியாகல தோட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு கொவிட் 19 தொற்று இன்று (04) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மனைவி, கணவன் மற்றும் அவர்களது மகள் ஆகியோருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.

இரண்டாவது தடவையாக நேற்றுமுன்தினம் நடத்தப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் இவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை இன்று (புதன்கிழமை) கண்டறியப்பட்டுள்ளது. முதல்சுற்று பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்றவில்லை என்ற முடிவு வெளியாகியிருந்த நிலையில், தற்போது அவர்களுக்கு வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த குடும்பத்தில் 10 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அதில் மூவருக்கு இதற்கு முன்னர் கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டதால் அவர்களுடன் நெருங்கிப் பழகியவர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர்.

குறித்த குடும்பத்தில் ஒருவர் பேலியகொடை மீன் சந்தையில் தொழில் புரிந்து வந்துள்ளார். அதன்படி, குறித்த குடும்பத்தில் 6 பேருக்கு இதுவரை கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த குடும்பதை சேர்ந்த மேலும் 4 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர்களை சிகிச்சை நிலையங்களுக்கு சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அழைத்துச் செல்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment