முன்னாள் மீன் வள அபிவிருத்தி அமைச்சர் திலீப் வெதாராச்சி நாட்டில் மீன் விற்பனையை ஊக்குவிக்க பச்சை மீனை நேற்று சாப்பிட்டு முழு உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
டெய்லி மெயில், த சன், இந்தியா டுடே, ஸ்கை நியூஸ், டெக்கான் ஹெரால்ட், யூ.எஸ்.நியூஸ் மற்றும் டெலிகிராப் உட்பட உலகெங்குமுள்ள செய்தி ஊடகங்கள் அமைச்சரின் இந்த நடவடிக்கையை அறிவித்ததுடன் சில ஊடகங்கள் இதை ஒரு விநோதமான செய்தி மாநாடு என வர்ணித்துள்ளன.
பேலியகொட மீன் சந்தையிலிருந்து கொவிட்-19 கொத்தணி கண்டறியப்பட்டதை அடுத்து மீன் மற்றும் கடல் உணவுகள் ஊடாக கொரோனா வைரஸ் பரவுவதாக பொதுமக்கள் பயந்ததன் விளைவாக நாடு முழுவதும் மீன் விற்பனை குறைந்தது.
இதேவேளை முன்னாள் அமைச்சர் மீன் சாப்பிடுவது பாதுகாப்பானது என்றும் கொவிட்-19 தொற்றால் மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்றும் பொதுமக்களுக்கு உறுதியளிக்க செய்தியாளர் மாநாட்டில் பச்சை மீனை சாப்பிட்டுக் காட்டியிருந்தமை தெரிந்ததே.
No comments:
Post a Comment