மட்டக்களப்பு, பட்டிப்பளையில் ஒருவருக்கு கொரனா - News View

About Us

About Us

Breaking

Saturday, November 14, 2020

மட்டக்களப்பு, பட்டிப்பளையில் ஒருவருக்கு கொரனா

எஸ்.எம்.எம்.முர்ஷித் 

மட்டக்களப்பு, பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தாந்தாமலைப் பிரதேசத்தில் ஒருவருக்கு கொரனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.

இவர் கடந்த 26ம் திகதி கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு வந்தவர் எனவும், தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில், மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர். பரிசோதனையின் போது தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்றுடன் கிழக்கு மாகாணத்தில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 119 எனவும், மட்டக்களப்பில் எண்ணிக்கை 75 எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment