கொழும்பு மாவட்டத்தில் மருதானை, கொழும்பு கோட்டை, புறக்கோட்டை, கொம்பனித்தெரு மற்றும் டாம் வீதி ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் திங்கட்கிழமை காலை 5 மணி வரை இவ்வாறு தனிமைப்படுத்தல் அறிவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், மேல் மாகாணத்தில் தற்போது மாகாணத்தை விட்டு வெளியேறுவதற்கு விதிக்கப்பட்ட தடையுத்தரவு, நாளை (15) நள்ளிரவுடன் நிறைவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment