முல்லேரியா வைத்தியசாலை (கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலை) பி.சி.ஆர். இயந்திரத்தில் தொழில்நுட்பக் கோளாறு எதுவும் ஏற்படவில்லையென சீனத் தூதரகம் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளது.
அண்மைய வாரங்களாக வேகமாக பரிசோதிக்க பயன்படுத்தப்பட்ட பரிசோதனைக்கான உதிரிப்பாகங்கள் பற்றாக்குறையால் குறித்த இயந்திரத்தின் செயல்பாடு பாதிக்கப்பட்டுள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது.
தற்போது புதிய பரிசோதனை உதிரிப்பாகங்களின் தேவை ஏற்பட்டுள்ளது. அவை 3-4 நாட்களில் வரும்" என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கிழக்கு முல்லேரியா வைத்தியசாலையில் அண்மையில் திருத்தப்பட்ட பி.சி.ஆர். இயந்திரம் மீண்டும் பழுதடைந்து விட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்நிலையிலேயே சீனத் தூதரம் மேற்கண்டவாறு டுவிட்டரில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment