கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரண்டாவது முனையத்தை நிர்மாணிக்கும் பணிகளை ஆரம்பித்து வைக்கிறார் பிரதமர் மஹிந்த - News View

About Us

About Us

Breaking

Monday, November 16, 2020

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரண்டாவது முனையத்தை நிர்மாணிக்கும் பணிகளை ஆரம்பித்து வைக்கிறார் பிரதமர் மஹிந்த

கட்டுநாயக்க பண்டாரநக்க சர்வதேச விமான நிலையத்தில் பல அடுக்குகளைக் கொண்ட இரண்டாவது முனையத்தை நிர்மாணிக்கும் பணிகள் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எதிர்வரும் புதன்கிழமை 18ஆம் திகதி பிரதமர் மகிந்த ராஜபக்ஷ கட்டுமானப் பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைப்பாரென தெரியவந்துள்ளது. 

அத்தோடு இந்த முனையத்தை நிர்மாணிக்க சுமார் 107 பில்லியன் ரூபாவுக்கு மேலான தொகை செலவாகுமென மதிப்பிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

மேலும், இந்த அபிவிருத்தி திட்டத்திற்கு ஜப்பான் முதலீடு செய்துள்ளதாகவும், இதனை மூன்றாண்டுகளுக்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment