கொரோனா தடுப்பூசியின் இறுதிக்கட்ட சோதனை பல நாடுகளிலும் நடைபெற்று வருகின்ற நிலையில் அவற்றுக்கான சந்தை கேள்விகள் உலக நாடுகளிடையே அதிகரிக்கும் அறிகுறிகள் தொடங்கியுள்ளன.
அமெரிக்காவின் மாடர்னா மற்றும் பைசர் நிறுவனத்தை விட எங்கள் தடுப்பூசி விலை மலிவாக இருக்கும் என ஸ்புட்னிக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் மாடர்னா நிறுவன தடுப்பூசியின் ஒரு டோஸ் (இந்திய ரூபா) விலை சுமார் ரூ.1,875 முதல் ரூ.2,775 வரையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டின் பைசர் நிறுவன தடுப்பூசியின் ஒரு டோஸ் விலை சுமார் ரூ.1,500 ஆகும்.
இந்நிலையில், அமெரிக்க தடுப்பூசிகளை விட ரஷியா தயாரித்துள்ள ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் விலை மிகவும் மலிவாக இருக்கும் என்று அதன் அதிகாரபூர்வ இணையத்தளம் கூறுகிறது.
ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் விலை அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என ரஷிய நேரடி முதலீட்டு நிதியத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment