இலங்கையில் கொரோனா தொற்றுடன் ஆரோக்கியமான குழந்தை பெற்ற பெண் - News View

About Us

About Us

Breaking

Saturday, November 7, 2020

இலங்கையில் கொரோனா தொற்றுடன் ஆரோக்கியமான குழந்தை பெற்ற பெண்

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான கர்ப்பிணி தாய் ஒருவர் ஆரோக்கியமான முறையில் குழந்தை பெற்றுள்ளார்.

குறித்த கர்ப்பிணி தாய் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலேயே குழந்தை பெற்றுள்ளார். சிசேரியன் சத்திர சிகிச்சை ஊடாக அவர் குழந்தையைப் பிரசவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சத்திர சிகிச்சைக்காக 20 பேர் கொண்ட வைத்திய குழுவொன்று செயற்பட்டுள்ளார்கள் என சத்திர சிகிச்சை மேற்கொண்ட விசேட வைத்தியர் மயுர மானதெவொலகே தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான தாய் ஒருவர் ஆரோக்கியமான முறையில் குழந்தை பெற்ற இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

No comments:

Post a Comment