வெலிக்கடை சிறைச்சாலையில் 7 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் இதனை அறிவித்துள்ளது.
இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் ஒரு சிறைச்சாலை அதிகாரி மற்றும் 4 பெண் கைதிகள், 2 ஆண் கைதிகள் ஆகியோருக்கு இவ்வாறு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அடையாளம் காணப்பட்ட கைதிகளை வெலிக்கந்தை வைத்தியசாலைக்கும், சிறைச்சாலை அதிகாரியை IDH வைத்தியசாலைக்கும் அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிறைச்சாலையில் கொரோனா எவ்வாறு பரவியது என்பது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா நோயாளர்களுடன் தொடர்புகளை பேணியவர்களை தனிமைப்படுத்தி பி.சி.ஆர். சோதனைக்கு உட்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது அதேநேரம் சிறைச்சாலை வளாகமும் தொற்று நீக்கம் செய்யப்படவுள்ளது.
No comments:
Post a Comment