இன்று (21) கட்டாரிலிருந்து 338 பேர் உள்ளிட்ட 417 பேர் இலங்கை திரும்பியுள்ளதாக, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.
இன்று கட்டாரின் டோஹா நகரிலிருந்து UL 218 எனும் விமானம் மூலம் 296 பேரும், QR 668 எனும் மற்றுமொரு விமானம் மூலம், 42 பேரும் என 338 பேர் நாடு திரும்பியுள்ளனர்.
அத்துடன் இன்று (21) காலை EK 667 எனும் விமானம் மூலம் ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபி நகரிலிருந்து 21 பேர் நாடு திரும்பியுள்ளனர்.
அத்துடன் UL 1026 எனும் விமானம் மூலம் இந்தியாவிலிருந்து 58 பேர் நாடு திரும்பியுள்ளனர்.
இவ்வாறு நாடு திரும்பிய அனைவரும், முப்படையினரால் பராமரிக்கப்பட்டு வரும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இன்று (21) காலை வரை முப்படையினரால் பராமரிக்கப்பட்டு வரும் 38 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 3,894 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.
இதேவேளை நேற்றையதினம் (20) நாட்டில் 11,398 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment