2 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளிப்பு - மூழ்கிய படகின் உச்சியை பிடித்து உயிர்பிழைத்த நபர் - News View

About Us

About Us

Breaking

Monday, November 30, 2020

2 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளிப்பு - மூழ்கிய படகின் உச்சியை பிடித்து உயிர்பிழைத்த நபர்

அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் படகு உடைந்ததால் நடுக்கடலில் தத்தளித்த நபர் கிட்டத்தட்ட 2 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தை சேர்ந்த ஸ்டூவர்ட் (62). இவர் ஃபுளோரிடாவின் போர்ட் கனவரல் பகுதியில் உள்ள துறைமுகத்தில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை (நவம்பர் 27) மாலை 4 மணியளவில் தனது நவீன படகில் வழக்கமான பயணமாக அட்லாண்டிக் கடலுக்கு மீன் பிடிக்கவும், சுற்றிப்பார்க்கவும் சென்றுள்ளார். இவர் வழக்கமாக இரவு நேரங்களில் கடலில் தங்குவது இல்லை. 

ஆனால், கடந்த வெள்ளிக்கிழமை தனது படகில் கடலுக்கு சென்ற ஸ்டூவட் அன்று இரவு கரை திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த ஸ்டூவர்ட்டின் உறவினர்களும், நண்பர்களும் அடுத்த நாள் (நவம்பர் 28) காலை 11 மணியளவில் ஸ்டூவர்ட் காணாமல் போனது தொடர்பாக கடலோர காவல் படையினரிடம் தகவல் கொடுத்தனர். 

இதையடுத்து, மாயமான ஸ்டூவர்டை தேடும் பணியில் ஃபுளோரிடா மாகாண கடலோர காவல் படையினர் தீவிரமாக ஈடுபட்டனர். ஆனால், ஸ்டூவார்டுக்கு என்ன ஆனது என்ற எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இந்நிலையில், மாயமாகி கிட்டத்தட்ட 2 நாட்களுக்கு பின்னர் (நவம்பர் 29 காலை 11 மணியளவில்) கடற்கரையில் இருந்து 86 மைல் தொலைவில் ஸ்டூவர்ட் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். 

ஸ்டூவர்ட்டின் படகு நவம்பர் 27ம் திகதி நள்ளிரவில் நடுக்கடலில் நின்று கொண்டிருந்தபோது திடீரென கோளாறு ஏற்பட்டது. மேலும், கடல் நீர் படகிற்குள் நுழையந்ததால் படகு கடலுக்குள் மூழ்கத் தொடங்கியது. இதனால், அதிர்ச்சியடைந்த ஸ்டூவர்ட் படகின் மேற்பரப்புக்கு சென்று இரவு முழுவதும் விழித்து இருந்துள்ளார்.

அடுத்த நாள் (28-ம் திகதி) முழ்கிக் கொண்டிருந்த படகில் இருந்து ஸ்டூவர்ட் அப்பகுதியில் யாராவது மீன்பிடிக்க அல்லது சுற்றிப்பார்க்க வருவார்களா? என உதவியை எதிர்பார்த்து காத்திருந்தார். ஆனால், அன்று முழுவதும் கடலின் அப்பகுதிக்கு யாரும் வரவில்லை. அன்று மீன் உள்ளிட்ட சில கடல் வாழ் உயிரினங்களை சாப்பிட்டு உயிர் பிழைத்துள்ளார்.

அதற்கு அடுத்த நாள் (29-ம் திகதி) காலை ஸ்டூவர்டின் படகு கிட்டத்தட்ட முழுமையாக மூழ்கிவிட்டது. அப்போது அதிர்ஷ்டவசமாக அப்பகுதி வழியாக சென்றுகொண்டிருந்த ஒரு படகை கண்ட ஸ்டூவர் தனது சட்டையை கழற்றி அதை வைத்து சைகை காட்டியுள்ளார். இதை கவனித்த அந்த படகில் இருந்தவர்கள் மூழ்கிக் கொண்டிருந்த படகில் இருந்து ஸ்டூவர்டை (29-ம் திகதி 11 மணியளவில்) உயிருடன் மீட்டனர்.

இதையடுத்து 27ம் திகதி கடலுக்கு சென்று படகு கோளாறால் அட்லாண்டிக் கடலில் சிக்கிக் கொண்ட ஸ்டூவர்ட் கிட்டத்தட்ட 2 நாட்க்ளுக்கு பின்னர் (29ம் திகதி 11 மணியளவில்) உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment