ஹட்டனில் பெண்ணொருவருக்கு கொரோனா - 18 பேர் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டனர் - News View

About Us

About Us

Breaking

Thursday, November 5, 2020

ஹட்டனில் பெண்ணொருவருக்கு கொரோனா - 18 பேர் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டனர்

ஹட்டன், தும்புருகிரிய பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு நேற்று (04.11.2020) இரவு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று ஹட்டன் - டிக்கோயா நகர சபையின் பொது சுகாதார பரிசோதகர் ஆர்.எஸ்.எஸ். மெதவல தெரிவித்தார்.

இதனையடுத்து குறித்த நபருடன் தொடர்பைப் பேணிய 6 குடும்பங்களைச் சேர்ந்த 18 பேர் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான குறித்த பெண் கடந்த 2 ஆம் திகதி ஹட்டன், கார்கில்ஸ் புட்சிட்டிக்கு சென்றுள்ளார். இதனால் அந்நிறுவனத்தின் வளாகம் தொற்றுநீக்கம் செய்யப்பட்டது.

இவருக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பது தொடர்பில் பொது சுகாதார பரிசோதகர்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment