விவசாயியிடமிருந்தும் ஒரு ஹெக்டயருக்கு 1000 கிலோ நெல் கொள்வனவு செய்ய திட்டம் - ஒவ்வொரு விவசாய சேவை மத்திய நிலையத்திலும் இயந்திர பிரிவு அமைக்க திட்டம் - News View

About Us

About Us

Breaking

Thursday, November 26, 2020

விவசாயியிடமிருந்தும் ஒரு ஹெக்டயருக்கு 1000 கிலோ நெல் கொள்வனவு செய்ய திட்டம் - ஒவ்வொரு விவசாய சேவை மத்திய நிலையத்திலும் இயந்திர பிரிவு அமைக்க திட்டம்

உர மானியத்தைப் பெறும் ஒவ்வொரு விவசாயியிடமிருந்தும் அடுத்த பருவத்திலிருந்து ஒரு ஹெக்டயருக்கு 1000 கிலோ நெல் தலா 50 ரூபா உத்தரவாத விலையில் கொள்வனவு செய்யப்படும் என்று கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்தார்.

நெல் களஞ்சியப்படுத்தலை திறமையாகவும் பாதுகாப்பாகவும் மாற்றியமைப்பதற்காக களஞ்சிய வசதிகளை சரி செய்ய நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு ரூ.100 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.

நெல் மீதான ஏகாதிபத்தியத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கும், நெல் விலையை முறையான வகையில் பராமரிக்கவும் குறித்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்றும் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்தார்.

விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும் விவசாயிகள் போக்கு வரத்து மற்றும் இடைத்தரகர்கள் போன்ற பிரச்சினைகள் மற்றும் வனவிலங்குகளால் ஏற்படுகின்ற சேதங்களால் அறுவடையின் பெரும்பகுதி அழிக்கப்படுகிறது என்றும் இதன் காரணமாக சில பகுதிகளில் உள்ள விவசாயிகள் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட தயங்குகிறார்கள் என்றும் ஆலோசனைக் குழுவில் பங்கேற்ற தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சுட்டிக்காட்டினார்.

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் அலுத்கமகே, குறித்த விடயம் தொடர்பாக வனவிலங்குகள் திணைக்களத்துடன் கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாகவும், விஞ்ஞான ரீதியான அணுகுமுறையுடன் இதனை நிவர்த்தி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இலங்கையில் விவசாய செயற்பாடுகளின் போது இரசாயன உரங்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன, இது பல உடல்நலம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது. 

இந்த நிலைமையைத் தவிர்க்கும் பொருட்டு, இலங்கையிலுள்ள அனைத்து விவசாய சேவை மத்திய நிலையத்திலும் மண் பரிசோதனை கருவிகள் வழங்கப்படும் என்றும், அப்பகுதியில் உள்ள மண் நிலைமைகளுக்கு ஏற்ப உரங்கள் வழங்கப்படும் என்றும் கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே வலியுறுத்தினார்.

விவசாய நடவடிக்கைகளை எளிதாக்குவதற்காக ஒவ்வொரு விவசாய சேவை மத்திய நிலையத்திலும் ஒரு இயந்திர பிரிவு அமைக்கப்படும். அதற்காக பெக்கோ உபகரணம், உழவு இயந்திரங்கள் போன்றவை உட்பட விவசாயிகளுக்கு தேவையான உபகரணங்களைப் பயன்படுத்துவதற்கான நடைமுறை பயிற்சி திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.

முழு நாட்டையும் உள்ளடக்கிய ஒரு தரவுத்தளம் விவசாய தகவல்களை உள்ளடக்கும் வகையில் தொகுக்கப்படும் என்றும், இதில் பல்வேறு காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் நிலைமைகளுக்கு ஏற்ப மாகாண மற்றும் மாவட்ட மட்டங்களில் பயிர் விளைச்சல் தொடர்பான அனைத்து தகவல்களும் அடக்கப்படும் என கமத்தொழில் அமைச்சர் தெரிவித்ததோடு உள்ளூர் அதிகாரிகளால் விவசாயிகளுக்கு அனைத்து தகவல்களையும் புதுப்பித்து பணிகளை எளிதாக்குவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

நெல் நிலங்களை முறையாக நிர்மாணித்தல், பொருளாதார மையங்களை புதுப்பித்தல், விவசாய மத்திய நிலையங்களை புதுப்பித்தல், தேவைக்கேற்ப புதிய ஆட்சேர்ப்பு மற்றும் மாவட்ட அளவில் உர விநியோகம் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து இதன்போது விவாதிக்கப்பட்டது.

கமத்தொழில் அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே, இராஜாங்க அமைச்சர் மொஹான்பிரியதர்ஷன டி சில்வா, இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், இராஜாங்க அமைச்சர் டி.பி.ஹேரத், பாராளுமன்ற உறுப்பினர்கள், கமத்தொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், விவசாய சேவைகள் பணிப்பாளர் மற்றும் உட்பட அரசு அதிகாரிகள் பலரும் இதன்போது கலந்துக்கொண்டனர்.

No comments:

Post a Comment