ரிஷாட் பதியுதீன் மற்றும் அடைக்கலம் கொடுத்தவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர் - News View

About Us

About Us

Breaking

Monday, October 19, 2020

ரிஷாட் பதியுதீன் மற்றும் அடைக்கலம் கொடுத்தவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவருக்கு அடைக்கலம் கொடுத்த சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 07 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் சி.ஐ.டி அதிகாரிகளால் இன்று அதிகாலை தெஹிவளையில் உள்ள வீடொன்றில் கைது செய்யப்பட்டார்.

இதனை அடுத்து அவர் மறைந்திருந்த வீட்டில் வசிக்கும் மருத்துவர் உட்பட 07 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களில் ஒரு பெண் மருத்துவர் உட்பட 02 பெண்கள் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment