மூடப்பட்டிருந்த புகையிரத கடவையை மீறிச் சென்ற சாரதி, நடத்துனர் கைது - News View

About Us

About Us

Breaking

Thursday, October 1, 2020

மூடப்பட்டிருந்த புகையிரத கடவையை மீறிச் சென்ற சாரதி, நடத்துனர் கைது

பாதுகாப்பான புகையிரதக் கடவையொன்று மூடப்பட்டிருந்த நிலையில், பஸ் வண்டியைச் செலுத்திச் சென்ற குற்றச்சாட்டில் அப்பஸ் வண்டியின் சாரதியும் நடத்துனரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இக்கைது நேற்று (30) இடம்பெற்றுள்ளது.

கடந்த 28ஆம் திகதி, தெற்கு பயாகல புகையிரதக் கடவை வீதியில் பாதுகாப்பான புகையிரதக் கடவை மூடப்பட்டிருந்த நிலையில், பஸ் வண்டியொன்று செலுத்திச் செல்லப்பட்டமை தொடர்பில் சமூக வலைத்தளங்கள் ஊடாக ஒளிபரப்பாகிய வீடியோக் காட்சிகளை ஆதரமாகக் கொண்டு இக்கைது இடம்பெற்றுள்ளதாக, பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

அளுத்கமவிலிருந்து கொழும்பு வரை பயணித்த சொகுசு பஸ் வண்டியின் சாரதியும் நடத்துனருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (01) முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். இது தொடர்பில் பயாகல பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment