இலங்கையில் தகவல்கள் வழங்கினால் பணப் பரிசு - News View

About Us

About Us

Breaking

Thursday, October 1, 2020

இலங்கையில் தகவல்கள் வழங்கினால் பணப் பரிசு

இலங்கையில் செயற்படும் பாதாள உலக குழுவினரிடம் துப்பாக்கிகள், வெடிபொருட்கள் உட்பட பாரிய ஆயுதங்கள் உள்ளதாக புலனாய்வு பிரிவு உறுதி செய்துள்ளது.

பிரபுக்களை இலக்கு வைத்து நடத்தப்படும் கொலைகள் உட்பட பல்வேறு குற்றச் செயல்கள் மேற்கொள்ளும் நோக்கில் இவ்வாறான ஆயுதங்களை தம்வசம் வைத்துள்ளனர். இந்த ஆயுதங்களை பாதாள உலக குழுவினரால் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் தகவல் வழங்குபவர்களுக்கு மிகப்பெரிய அளவிலான பணப்பரிசு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத ஆயுதங்கள் தொடர்பில் தகவல் வழங்கும் நபர்களுக்கும், பொலிஸாருக்கு உதவும் நபர்களுக்கும் வழங்கப்படும் பணப்பரிசை அதிகரிப்பதற்கு ஏற்கனவே நடவடிக்கை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment