தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்து ஒருவர் மரணம் - ஏறாவூர் பொலிஸ் பிரிவில் சம்பவம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 28, 2020

தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்து ஒருவர் மரணம் - ஏறாவூர் பொலிஸ் பிரிவில் சம்பவம்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மரமேறியொருவர் தென்னை மரத்திலிருந்து தேங்காய்களைப் பறித்து விட்டு மரத்திலிருந்து கீழிறங்கும்போது தவறி விழுந்து மரணித்த சம்பவம் ஏறாவூர் பொலிஸ் பிரிவில் பதிவாகியுள்ளது.

வந்தாறுமூலை பேக் ஹவுஸ் வீதியை அண்டி வசிக்கும் சீனித்தம்பி நடராசா (வயது 60) என்பவரே இவ்வாறு மரணித்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

மரமேறி தொழில் செய்து தனது வாழ்வாதாரத்தைத் தேடிக் கொள்ளும் குடும்பஸ்தரான இவர் வழமைபோன்று தென்னை மரமேறித் தேங்காய் பறிப்பதில் திங்கட்கிழமையும் 27.10.2020 ஈடுபட்டுக் கொண்டு இருந்துள்ளார்.

வந்தாறுமூலையிலுள்ள வளவொன்றிலிருந்த தென்னை மரத்தில் தேங்காய்களை பறித்து விட்டு மரத்திலிருந்து கீழிறங்கும்போது சடுதியாக தவறி கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளார்.

உணர்வற்றுப் போயிருந்த அவரை வைத்தியசாலையில் சேர்ப்பிப்தற்காக 1990 அவசர் அம்பியூலன்ஸ் சேவைக்கு அழைப்பித்து உறவினர்கள் உடனடியாக செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் சேர்ப்பித்துள்ளனர்.

எனினும் அவர் ஏற்கெனவே மரணித்து விட்டதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து சடலம் மீதான உடற்கூறாய்வுப் பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டதுடன் இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

No comments:

Post a Comment