வவுனியா மாவட்ட மாகாண பிரதி விவசாய பணிப்பாளராக முன்னர் கடமையாற்றிய அ. சகிலா பானு பதவி உயர்வுடன் மன்னார் மாவட்ட விவசாய பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய விவசாய அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் குமுது பெரேராவால் இந்த நியமனக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்டத்தில் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் பணியாற்றிய இவர் வவுனியா விவசாய கல்லூரியுடன் இணைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment