சிறைச்சாலையில் பணி புரியும் அதிகாரி ஹெரோயினுடன் கைது! - News View

About Us

About Us

Breaking

Sunday, October 18, 2020

சிறைச்சாலையில் பணி புரியும் அதிகாரி ஹெரோயினுடன் கைது!

புத்தளம் சிறைச்சாலையில் பணி புரியும் அதிகாரி ஒருவர் ஹெரோயின் போதைப் பொருளுடன் பொலிஸ் போதை ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

புத்தளம் பொலிஸ் போதை ஒழிப்புப் பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலுக்கமைய புத்தளம் பகுதியில் இன்று (19) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 40 கிராம் 870 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதுடன் மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் புத்தளம் சிறைச்சாலையில் பணி புரியும் கொச்சிக்கடை பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸ் போதை ஒழிப்புப் பிரிவினர் தெரிவித்ததுடன் இன்று புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக மேலும் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment