சட்ட விரோதமாக மதுபானம் தயாரித்த வெளிநாட்டு பிரஜை உட்பட மூவர் கைது - News View

About Us

About Us

Breaking

Sunday, October 18, 2020

சட்ட விரோதமாக மதுபானம் தயாரித்த வெளிநாட்டு பிரஜை உட்பட மூவர் கைது

கொள்ளுப்பிட்டிய பகுதியில் சட்ட விரோத மதுபான தயாரிப்பு நிலையமொன்று முற்றுகையிடப்பட்டு மதுபானம் மற்றும் சிகரெட்டுக்களுடன் வெளிநாட்டு பிரஜையொருவர் மற்றும் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது. 

கொள்ளுப்பிட்டிய பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய நேற்று ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பிலேயே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

குறித்த சட்டவிரோத மதுபான தயாரிப்பு நிலையத்திலிருந்து 40 லீற்றர் சட்ட விரோத மதுபானம், 888 லீற்றர் கோடா, சட்ட விரோதமாகக் கொண்டு வரப்பட்ட 920 சிகரெட்டுக்கள், தகரங்கள் 2, 3 எரிவாயு அடுப்புகள் மற்றும் 55 கிலோ அரிசி ஆகியன கைப்பற்றப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர். 

சுற்றிவளைப்பின் போது 44 மற்றும் 54 வயதுடைய பெண்கள் இருவரும் 35 வயது மதிக்கத்தக்க வெளிநாட்டு பிரஜையொருவருமே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment