தொழிற்சாலை நிர்வாகங்கள் சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்கவும் : அமைச்சர் பவித்திரா - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 14, 2020

தொழிற்சாலை நிர்வாகங்கள் சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்கவும் : அமைச்சர் பவித்திரா

அனைத்து தொழிற்சாலை நிர்வாகங்களும் சுகாதார திணைக்களத்தால் அறிவிக்கப்பட்ட சுகாதார பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்குமாறு சுகாதார அமைச்சர் பவித்திரா தேவி வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

தொழிற்சாலை நிர்வாகங்கள் ஒரு நாளில் குறைந்தது மூன்று தரமாவது தொழிலாளரின் காய்ச்சலைப் பரிசோதிக்குமாறும் அவர்களது தங்குமிடம் மற்றும் நெருக்கமான தொடர்புகளைப் பரிசோதிக்குமாறும், போக்குவரத்தில் நெரிசலைக் குறைக்க தொழிற்சாலைகளில் வேலை நேரங்களையும் சிப்ட் முறைகளையும் தொடர்ந்து மாற்றுமாறும், தொழிலாளர்களின் முகவரிகளை உடனடியாக புதுப்பிக்குமாறும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கட்டுநாயக்க, பியகம சுதந்திர வர்த்தக வலயங்களிலுள்ள தொழிலாளர்களுக்கு இலவசமாக பிசிஆர். பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் தொழிற்சாலை நிர்வாகங்கள் தொழிற்சாலைப் பகுதிகளை கண்டிப்பாக தனிமைப்படுத்துமாறும் கொவிட்-19 பரவலைத் தடுக்க வெளியார் உள்ளிடுவதைத் தடை செய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment