கர்ப்பிணி பெண் ஒருவருக்கு கொரோனா - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 7, 2020

கர்ப்பிணி பெண் ஒருவருக்கு கொரோனா

கொழும்பு காசல் வீதி பெண்கள் வைத்தியசாலையில் இருந்த கர்ப்பிணி பெண் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.

குறித்த பெண், சுவாசக் கோளாறு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கம்பஹா, மீரிகம பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் பிரதீப் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த பெண் தற்போது ஐடிஎச் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், மினுவாங்கொட கொரோனா தொற்று பரவலுக்கும் இந்தப் பெண்ணுக்கும் ஏதேனும் தொடர்புகள் உள்ளதா என்பது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுகிறது.

No comments:

Post a Comment