மினுவாங்கொடை பொலிஸ் நிலையம் தனிமைப்படுத்தப்பட்டது - News View

About Us

About Us

Breaking

Thursday, October 8, 2020

மினுவாங்கொடை பொலிஸ் நிலையம் தனிமைப்படுத்தப்பட்டது

மினுவாங்கொடை பொலிஸ் நிலைய சிற்றுண்டிச்சாலையின் உரிமையாளர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து, அப்பொலிஸ் நிலையத்தின் சகல அதிகாரிகளும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக, பதில் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, குறித்த கொவிட்-19 தொற்றாளரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் மினுவாங்கொடை பொலிஸ் நிலைய அதிகாரிகள் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த சிற்றுண்டிச்சாலையின் உரிமையாளரது மகன், Brandix தொழிற்சாலையில் பணியாற்றுபவர் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதோடு, அவருக்கு கொரோனா தொற்றுள்ளதாக ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment