பாராளுமன்ற கட்டிடத் தொகுதி மூடப்பட்டது - News View

About Us

About Us

Breaking

Sunday, October 25, 2020

பாராளுமன்ற கட்டிடத் தொகுதி மூடப்பட்டது

கொரோனா அச்சம் காரணமாக ஸ்ரீ ஜயவர்தனபுரவில் அமைந்துள்ள பாராளுமன்ற கட்டிடத் தொகுதி மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு இது மூடப்பட்டிருக்கும்.

பொலிஸ் அதிகாரியொருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து, கிருமி தொற்று நீக்கம் செய்வதற்காக இன்று திங்கட்கிழமை மற்றும் நாளை செவ்வாய்க்கிழமை ஆகிய இரண்டு நாட்களுக்கு பாராளுமன்ற கட்டிடத் தொகுதி மூடப்பட்டுள்ளது. 

பொலிஸ் அதிகாரிகளின் சமையலறை மற்றும் சிற்றுண்டிச்சாலைக்கு பொறுப்பான சப்-இன்ஸ்பெக்டருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக தஸநாயக்க தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் பணிபுரியும் ஊழியர்கள் வீட்டில் இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். பாராளுமன்ற நடவடிக்கைகள் புதன்கிழமை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment