ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வாழைச்சேனை, ஓட்டமாவடி பிரதேசத்தில் மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்று உள்ளதாக இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் இதுவரை 27 பேர் கொரோனா தொற்றுள்ளவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஏ.லதாகரன் தெரிவித்தார்.
கொரோனா தெற்று தொடர்பில் இன்று காலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் “கிழக்கு மாகாணத்தில் பேலியகொடை மீன்சந்தையில் ஏற்பட்ட கொரோனா தொற்று காரணமாக பல இடங்களில் தொற்றுள்ளவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய மட்டக்களப்பு வாழைச்சேனை, ஓட்டமாவடி பிரதேசத்தில் கடந்த சனிக்கிழமை மேற்கொண்ட பி.சி.ஆர். பிரிசோதனையில் 11 பேருக்கு கொரோனா தொற்றுறுதி கண்டுபிடிக்கப்பட்டு வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் தனிமைப்படுத்தல் உரடங்கு சட்டம் பிற்கப்பட்டுள்ளது
இந்த நிலையில் பேலியகொடை மீன்சந்தையுடன் தொடர்புபட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அதில் 60 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்று உள்ளதாக கண்டறியப்பட்டதையடுத்து கிழக்கில் இதுவரை 43 பேர் கொரோனா தொற்று உள்ளவர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment