கொழும்பில் மேலும் 5 பொலிஸ் பிரிவுகளில் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய, மாளிகாவத்தை, வாழைத்தோட்டம், டாம் வீதி, ஆட்டுப்பட்டித் தெரு, கரையோர பொலிஸ் ஆகிய பொலிஸ் பிரிவுகளில் உடன் அமுலாகும் வகையில் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்
அந்த வகையில் தற்போது வரை இலங்கையில் 56 பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிபத் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
அந்த வகையில், குளியாபிட்டி பகுதியில் 5 பொலிஸ் பிரிவுகள், கம்பஹாவில் 33 பொலிஸ் பிரிவுகள், கொழும்பில் 15 பொலிஸ் பிரிவுகள், களுத்துறையில் 3 பொலிஸ் பிரிவுகளில், தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக, அவர் தெரிவித்தார்.
தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் ஊரடங்கு தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள விசேட அரச உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் இவர்களை தொடர்பு கொள்வதன் மூலம் ஊரடங்கு காலப்பகுதியில் பயண அனுமதிப்பதிரங்களை பெற்றுக்கொள்ள முடியும்.
No comments:
Post a Comment