கொழும்பின் சில பகுதிகளில் இன்று இரவு 10.00 மணி முதல் 8 மணி நேர நீர் வெட்டு - News View

About Us

About Us

Breaking

Saturday, October 10, 2020

கொழும்பின் சில பகுதிகளில் இன்று இரவு 10.00 மணி முதல் 8 மணி நேர நீர் வெட்டு

கொழும்பின் சில பகுதிகளில் இன்று (10) இரவு 10.00 மணி முதல், 8 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

கொழும்பு மாநகர நீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் முகாமைத்துவ திட்டத்தின் மேம்பாடு தொடர்பான முதலீட்டு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் காரணமாக இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்படுவதாக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

அதற்கமைய, இன்று (10) இரவு 10.00 மணி முதல், நாளை (11) மு.ப. 6.00 மணி வரை, கொழும்பு 12 (புதுக்கடை), கொழும்பு 13 (கொட்டாஞ்சேனை, கொச்சிக்கடை), கொழும்பு 14 (கிராண்ட்பாஸ்), கொழும்பு 15 (மட்டக்குளி, மோதறை, முகத்துவாரம், மாதம்பிட்டி) ஆகிய பகுதிகளில் 8 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்துடன், குறித்த காலப் பகுதியில் கொழும்பு 01 (கோட்டை), கொழும்பு 11 (புறக்கொட்டை) ஆகிய பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் மேற்கொள்ளப்படவுள்ளதாக சபை மேலும் தெரிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் பொதுமக்கள் தங்களுக்கு அவசியமான நீரை சேமித்து வைத்து பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ள தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, இதனால் ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருந்துவதாகவும் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment