சலுகை விலையில் தேங்காய் விற்பனை - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 23, 2020

சலுகை விலையில் தேங்காய் விற்பனை

கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் சலுகை விலையில் தேங்காய் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பெருந்தோட்டத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்று (23) முதல் லொறி மூலம் இவ்வாறு தேங்காய் விநியோகிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, 60 ரூபா எனும் சலுகை விலையில் நாடு முழுவதும் தேங்காய் விநியோகிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு, இதற்காக சிலாபம் பெருந்தோட்ட கம்பனி, குருணாகல் பெருந்தோட்ட கம்பனி, தென்னை பயிர்ச் செய்கை சபை ஆகியன திட்டமொன்றை ஆரம்பித்துள்ளது

No comments:

Post a Comment