47 பேருக்கு கொரோனா - குவைத்திலுள்ள இலங்கை தூதரகம் மூடப்பட்டது - News View

About Us

About Us

Breaking

Saturday, September 26, 2020

47 பேருக்கு கொரோனா - குவைத்திலுள்ள இலங்கை தூதரகம் மூடப்பட்டது

குவைத்தில் உள்ள இலங்கை தூதரகம், எதிர்வரும் ஒக்டோபர் 11ஆம் திகதி வரை மூடப்பட்டிருக்கும் என, தூதரகம் அறிவித்துள்ளது.

குறித்த தூதரகத்தின் அதிகாரிகள் 3 பேருக்கும், தூதரகத்தின் காப்பகத்தில் இருந்த பணிப் பெண்கள் 44 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, தூதரகம் அறிவித்துள்ளது.

இக்காலப்பகுதியில் slemb.kuwait@mfa.gov.lk எனும் மின்னஞ்சல் வாயிலாக தூதரகத்தை தொடர்பு கொள்ளுமாறும் தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது.

No comments:

Post a Comment