மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கஞ்சா சுருட்டுக்களுடன் இருவரை நேற்றிரவு (29) கைது செய்துள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபர்கள் வெள்ளை மணல் மற்றும் கிண்ணியா பகுதியைச் சேர்ந்த 40 மற்றும் 41 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபர்கள் இருவரும் நீண்ட காலமாக மூதூர் மற்றும் தோப்பூர் பகுதிகளில் கஞ்சா சுருட்டுக்களை விற்பனை செய்து வந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாகவும் மூதூர் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர்கள் தொடர்பாக மூதூர் பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் 17 கஞ்சா சுருட்டுக்களுடன் சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
திருகோணமலை நிருபர் பாருக்
No comments:
Post a Comment