சிறுவனை துஷ்பிரயோகப்படுத்திய நடன ஆசிரியர் கைது - News View

About Us

About Us

Breaking

Monday, August 24, 2020

சிறுவனை துஷ்பிரயோகப்படுத்திய நடன ஆசிரியர் கைது

ஆண் பிள்ளை ஒருவரை துஷ்பிரயோகப்படுத்திய நடன ஆசிரியர் கைது
ஆண் பிள்ளை ஒருவரை துஷ்பிரயோகப்படுத்திய நடன ஆசிரியர் ஒருவர் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர், பேராசிரியர் முதித விதான பத்திரண இதனை கூறினர். இதற்கமைய அதிகார சபைக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கமைய குறித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளளார். இதனால் குறித்த சிறுவன் கடுமையாக மன உளைச்சலுக்கு உள்ளானதாக தெரியவந்தது.

2019 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், ஒரு அரங்கத்தில் நடந்த முகமூடி நிகழ்வுக்கான பயிற்சியின்போது, குறித்த சிறுவனை இரவு உணவை எடுத்து வர தனது காரில் அழைத்துச் சென்றமை தெரியவந்தது, அந்த சமயத்தில் அந்த சிறுவனுக்கு போதைப் பொருள் அடங்கிய பானத்தை குடிக்க கொடுத்து கடுமையாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை தெரியவந்தது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேல் மாகாணத்தைச் சேர்ந்த 42 வயதான நடன ஆசிரியர் என தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment