யுவதியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய இளைஞருக்கு விளக்கமறியல் - News View

About Us

About Us

Breaking

Monday, August 24, 2020

யுவதியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய இளைஞருக்கு விளக்கமறியல்

குடும்பத்தவர்களினால் 17 வருடங்களாக ...
திருகோணமலை சம்பூரில் பதினேழு வயதுடைய பெண்ணொருவரை அழைத்துச் சென்று துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவரை அடுத்த செப்டெம்பர் மாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் இன்று (24) உத்தரவிட்டார்.

சீதனவெளி, சேனையூர் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் தனது வீட்டுக்கு அயல் வீட்டில் வசித்து வந்த பதினேழு வயதுடைய பெண்ணொருவரை காதலித்து வந்த நிலையிலே பெற்றோர்களுக்கு தெரியாமல் சம்பூர் சூரநகர் பகுதியில் உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்த நிலையில் சந்தேக நபரின் மனைவி சம்பூர் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கமைய நேற்று ஞாயிற்றுக்கிழமை (23) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபரை மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். பதினேழு வயதுடைய பெண் மருத்துவ பரிசோதனைக்காக மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment