
முல்லைத்தீவு, நெடுங்கேணி பிரதான வீதியிலுள்ள பெரும் பழமை வாய்ந்த மரங்கள் வீதியின் நடுவே சரிந்து இருக்கின்றது. கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக பெரும் பழமை வாய்ந்த மரங்கள் வீதியோரமாக வீழ்ந்து கிடக்கின்றது.
இதனால் இவ்வீதியூடாக பயணம் மேற்கொள்ளும் வாகனங்கள், பொதுமக்கள், பேருந்துகள் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்வதற்கு குறித்த வீதியிலுள்ள ஆபத்தான மரங்களை அகற்றி பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நேற்றுமுன்தினம் 29 ம் திகதி முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் வீதியோரத்தில் இருந்த மரம் முறிந்து வீழ்ந்தமையால் இருவர் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவமும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment