ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் 18 பெண்கள் உள்ளிட்ட 444 கைதிகள் விடுதலை - News View

About Us

About Us

Breaking

Monday, August 31, 2020

ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் 18 பெண்கள் உள்ளிட்ட 444 கைதிகள் விடுதலை

ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ், சிறைச்சாலைக் கைதிகள் 444 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளவர்களில் 18 பெண் சிறைக் கைதிகளும் அடங்குவதாக, சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்தார்.

வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து 83 பேரும், மகசின் சிறைச்சாலையிலிருந்து 06 பேரும், அநுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து 28 பேரும், குருவிட்ட சிறைச்சாலையிலிருந்து 35 பேரும் பொதுமன்னிப்பின் கீழ் விடுக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, பல்லேகலை சிறைச்சாலையிலிருந்து 54 பேரும், அகுணுகொழபெலெஸ்ஸ சிறைச்சாலையிலிருந்து 20 பேரும் விடுக்கப்பட்டுள்ளனர்.

சிறைச்சாலைக்குள் காணப்படும் நெரிசலைக் குறைப்பதற்காக இவ்வாறு கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக, சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment