கடந்த திங்கட்கிழமை (17) தேசிய மின் கட்டமைப்பில் ஏற்பட்ட தடை குறித்து ஆராய மின்சக்தி அமைச்சினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவுக்கு, இலங்கை மின்சார சபையின் தொழில்நுட்ப பொறியாளர்கள் மற்றும் அத்தியட்சகர்களின் சங்கம் அறிக்கையொன்றை சமர்ப்பித்துள்ளது.
அதில்,
1. மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் விநியோக அமைப்புகளின் பராமரிப்பு தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட முறையான நடைமுறையை செயல்படுத்துவதில் தோல்வி.
2. கெரவலபிட்டிய துணை மின்நிலையத்திற்கும் நுரைச்சோலை துணை மின்நிலையத்திற்கும் இடையில் பாதுகாப்பு மண்டலங்கள் செயற்படாமை.
3. கெரவலபிட்டி மற்றும் நுரைச்சோலை BUS BAR ஆகிய இரண்டிலும் நிலத்தடியில் பிரச்சினை.
4. இதற்கு முன்னர் நாடு முழுவதும் ஏற்பட்ட மின் தடை குறித்து நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்டுள்ளனவா?
5. நுரைச்சோலை மேலதிக ஜெனரேட்டர் செயற்படாமை.
6. திருப்தியளிக்காத மத்திய கட்டுப்பாட்டு மையத்தின் செயற்பாடு.
7. புதுப்பிக்கத்தகு எரிசக்தி புறக்கணிப்பு.
8. சில கட்சிகளின் சதி தொடர்பில் சந்தேகம்.
எனும் அடிப்படையில் குறித்த அறிக்கை அமைந்துள்ளது.
இலங்கை மின்சார சபையின் தொழில்நுட்ப பொறியாளர்கள் மற்றும் அத்தியட்சகர்களின் சங்கத்தினால் வெளியிடப்பட்ட குறித்த அறிக்கை வருமாறு,
No comments:
Post a Comment