
கொரோனா ஊரடங்கால் உலகம் முழுவதும் 160 கோடி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் ஆண்டனியோ குடரஸ் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் ஆண்டனியோ குடரஸ், கொரோனாவும், கல்வியும் குறித்து பேட்டி அளித்தார்.
அவர் கூறியதாவது கொரோனா பரவல் காரணமாக, உலகின் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பாடசாலைகள், கல்லூரிகள், பல்கழைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளன. அதனால், உலகம் முழுவதும் 160 கோடி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 2 கோடியே 38 லட்சம் குழந்தைகளும், உயர்வகுப்பு படிக்கும் மாணவர்களும் அடுத்த ஆண்டு படிப்பை கைவிட நேரிடலாம். இந்த ஆண்டு மழலையர் வகுப்புகளில் சேர வேண்டிய 4 கோடி குழந்தைகள், கல்வி பயிலும் வாய்ப்பை இழந்துள்ளனர். கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டதால், கல்வி ஏற்றத்தாழ்வு அதிகரித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment